பிரதேச மட்ட அரசியலில் ஈடுபடும் பெண் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பெண் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்கான
வேலைத்திட்டமொன்றை, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபேஅமைப்பு )தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்றது.


இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்திற்குரிய முதலாம் கட்ட நிகழ்வு சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கு மான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் அஹமட் மனாஸ் மக்கீன் அவர்களின் தலைமையில்
அம்பாறை மாவட்ட இணைப்பாபாளர் எஸ். எல். அப்துல் அஸீஸ் அவர்களின் இணைப்பில் கல்முனையில் இன்று 26.02.2022 இடம்பெற்றது .
இந் நிகழ்வில் சமூக ஊடகங்களின் முக்கியத்துவம், தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் ஊடக கோட்பாடுகள் உற்பட, ஊடக கருத்தரங்குகளில் உரையாற்றுகின்ற விதம் மற்றும் தகவல் அறியும் சட்டம் ,இணையவழி வன்முறைகளை தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு முகம் கொடுப்பது என்பது பற்றியும், இணையவழி வன்முறைகளுக்கு முகம் கொடுக்கின்ற போது, அவற்றுக்கு சட்ட ரீதியாக எவ்வாறு நடவடிக்கைககளை முன் எடுப்பது தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.


வளவாலராக அம்பாரை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆனையாளர் சுபியான், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஊடக செயலாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் ஜெ.யோகராஜ் , விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் ஊடகவியலாளர் ரிப்தி அலி,ஆகியோர் கலந்து கொண்டனர்


